அமெரிக்க உடனான வர்த்தக தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.4) எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு சார்பில் அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். அதில், “கடந்த ஓர் ஆண்டாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது’’