கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கேரளாவின் மூணாறில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் குவிந்துள்ளனர். இதனால் மூணாறு, கோவை, தேனி, மாட்டுப்பெட்டி, எர்ணாகுளம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்கின்றன. விடுமுறையை கொண்டாட வந்தவர்கள் நெரிசலில் சிக்கி அவதியடைந்தனர்.