கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக, விலை உயர்ந்து வருகிறது. வரும் மாதங்களில், தக்காளி வரத்து அதிகரிப்பதோடு, விலையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெயில் தாக்கல் காரணமாக செடிகள் வாடி வருவதால், தக்காளி சாகுபடியில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.