மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 05) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், வேலூர், திருப்பூர், கரூர், தர்மபுரி, திருவாரூர், சென்னை, கோவை, சேலம், சிவகங்கை, தஞ்சை, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரையும், சில இடங்களில் பணிகள் முடியும் வரையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். எனவே முன்கூட்டியே பொதுமக்கள் மின்சாதன பொருட்களை சார்ஜ் செய்தல் உள்ளிட்டவற்றை செய்துகொள்ள வேண்டும்.