தம்பியின் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக சகோதரி விஷம் குடித்து உயிரிழந்த சோகம் தஞ்சாவூரில் நடந்துள்ளது. நடுக்காவேரி காவல் நிலைய அதிகாரிகள் சகோதரர் தினேஷின் (26) மீது பொய்யான வழக்குப்பதிவு செய்ததாக சகோதரிகள் கீர்த்தி (27), மேனகா விஷம் குடித்தனர். இதில் கீர்த்தி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலைய வாசலில் பெண்கள் விஷம் குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.