இதையடுத்து, வந்தவாசி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமாா் அந்த ஏரியில் நேற்று (ஜூன் 12) நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஏரியில் இறைச்சிக் கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவா், அவற்றை உடனடியாக அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.மேலும், ஏரியில் இறைச்சிக் கழிவு கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.ஆய்வின் போது, வந்தவாசி வட்டாட்சியா் ஆா். பொன்னுசாமி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச். ஜலால், நகராட்சி மேலாளா் ஜி. ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி