தி.மலை: அரிய வகை ஆந்தை மீட்பு.. அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து வலசை வந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை ஆந்தையை தீயணைப்புத்துறை வீரர்கள் பிடித்து பாதுகாப்பாக காட்டில் விட்டனர். வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் முட்புதரில் வெள்ளை நிறத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே, தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முட்புதரில் இருந்த அரிய வகை ஆந்தையை லாவகமாக பிடித்தனர். பின்னர் பார்த்தபோது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற ஆந்தை என்றும், ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பல்வேறு வகை பறவைகள், பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து வந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும், மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும், வலசை வருவது வழக்கம். அதுபோல் தான் இந்த அரிய வகை வெள்ளை ஆந்தை வலசை வந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து பிடிபட்ட ஆந்தையை தீயணைப்புத்துறை வீரர்கள் கொண்டு சென்று அருகில் உள்ள வென்குன்றம் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

தொடர்புடைய செய்தி