திருவண்ணாமலை: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வியாளர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். சட்டப் பணிக்குழு ஆர்வலர் நடராஜன் முன்னிலை வகித்தார். 

ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, நீதிமன்ற வழக்கறிஞர் சா. இரா. மணி பங்கேற்று, குழந்தை தொழிலாளர் சட்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளித்திட வழி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். மேலும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஆசிரியர் மாவீரன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி