கல்வியை யாராலும் திருடவோ, அழிக்கவோ முடியாது. நம் நாட்டவர்கள் பல்வேறு நாடுகளில் உயர்ந்த நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் கற்ற கல்விதான். ஒரு காலத்தில் உயர்கல்வி கற்க வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்போது மாணவ-மாணவிகள் அவர்களது மாவட்டத்திலேயே மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் படிக்கும் நிலை உள்ளது. இவற்றையெல்லாம் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தவெக அரசு