திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் இரவு உற்சவத்தில், சிறப்பு அலங்கார கோலத்தில் இருந்த பிச்சாண்டவர் தங்கமேரு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது நடைபெற்ற வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளைப் பக்தர்கள் ஆனந்தமாகக் கண்டுரசித்தனர்.