திருவண்ணாமலை: ரம்ஜான் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை ஈத்கா மைதானத்தில் தொழுகை முடித்து வந்த தொழிலதிபர் ஜமாலுதீன் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின் போது உடன் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், பஷீர், ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.