திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியகோவில் கிராமத்தில் சூரிய ஒளி மின்சார அலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக ஜெயவேல் என்பவரை காவலாளிப் பணியில் அந்த தனியார் நிறுவனம் நியமித்தாகத் தெரிகிறது. இந்த நிலையில், வழக்கம் போல அவர் வேலைக்கு வந்தபோது சுமார் ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 485 மீட்டர் கேபிள் வயர் அந்தப் பகுதியில் இருந்து திருடுபோய் இருந்தது தெரிய வந்தது. கேபிள் வயர் திருட்டுச் சம்பவம் குறித்து, தனியார் நிறுவன பொறியாளர் கருப்புசாமி செய்யாறு போலீஸில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.