அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள், அலுமினியம், பேப்பர், தகரம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டவற்றை தேவையில்லை என குப்பைகளில் வீசப்படும் பொருள்களால் பூமி சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், அவற்றை மறுசுழற்சி மூலம் வீட்டிலும், பள்ளியிலும், பயன்படுத்தக்கூடிய அழகிய பொருள்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மாணவர்களின் அறிவுத்திறன் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பெரணமல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அப்போது அவர் மாணவர்களை வாழ்த்திப் பேசி, பரிசுகளை வழங்கினார். கண்காட்சியை பெற்றோர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் பார்வையிட்டனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்