போளூர்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வியாபாரிகள் வாங்குவதற்கு வராததால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கிடங்கு மற்றும் வெளியில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து கண்காணிப்பாளர் தினேஷ் கூறும்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் நெல் மூட்டைகள் நிரம்பியுள்ளன. எனவே, வெட்டவெளியில் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கும்படி கூறி வருகிறோம். இருந்தும், விவசாயிகள் வெளியில் நெல் மூட்டைகளை இறக்கிவைத்துள்ளனர் என்றார். பருவமழை தொடங்கியுள்ளதால் நெல் மூட்டைகள் மழைநீரில் நனையும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி