தி.மலை: முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ் வழங்கல்

மதுரையில் பாஜக சார்பில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், திருவண்ணாமலை வ.உ.சி. நகர், 25-ஆவது வார்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் பி. சந்தோஷ் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் கவிதா பிரதீஷ், மாவட்டப் பொருளாளர் எஸ். பி. கே. சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலர் பிரதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் ஏ. இளங்கோ வரவேற்றார். 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே. ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்கள், பக்தர்கள், வணிகர்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், நகரச் செயலர்கள் எம். வெங்கடேசன், பி. முத்துக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் வி. ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செங்கத்தில்: செங்கம் தொகுதிக்குள்பட்ட 65-ஆவது வாக்குச் சாவடி குழு சார்பில், செங்கத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் செங்கம் சேகர் தலைமையில், மகளிரணி நிர்வாகிகள் செங்கம் மேல்பாளையம், ஜீவானந்தம் தெரு பகுதியில் வீடுதோறும் பூ, பழம் அடங்கிய சீர்வரிசை தட்டுடன் சென்று மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி