தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.