இதையடுத்து அங்கே வந்த அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர், சைவ உணவு உண்டதாக கூறப்படும் அந்த ஆண் பக்தரிடம் விசாரணை செய்தார். அப்போது அவர் தாம் கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்துக் காட்டி, இது சைவம்தான் என்று கூறியுள்ளார். மேலும் சாப்பிட்டு முடித்த வெறும் இலை ஒன்றை காண்பித்தார்.
அதில் வைத்து அசைவ உணவு சாப்பிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அறநிலையத்துறை அதிகாரிக்கு எழுந்தது. இதனையடுத்து அறநிலையத்துறையின் சார்பில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அசைவ உண்டதாக கூறப்படும் இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.