திருவண்ணாமலை: வெயிலை பொருட்படுத்தாமல் வரிசையில் நிற்கும் பக்தர்கள்

திருவண்ணாமலைக்கு ஆந்திர பிரதேச, கர்நாடக, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் திரைப்பிரபலங்களும் அதிக அளவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உன்னாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்குத் திசையில் அமைந்துள்ள அம்மன் கோபுரம் அருகே நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் தரிசிக்க காத்திருக்கும் நிலையும், பக்தர்கள் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கோவிலுக்குள் சென்ற ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திர பிரதேச, தெலுங்கானா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டம் அதிகரித்து அலைமோதி வருகிறது.

தொடர்புடைய செய்தி