திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இஏஎப்., இன்று (25.03.2025) சேத்துப்பட்டு வட்டம், கோழிப்புலியூர் ஊராட்சியில் உள்ள ஆர்டிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் திட்ட முகாமில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைச் சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீப், செய்யாறு வட்டாரா ஆட்சியர் பல்லவிசர்மா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.