அப்போது, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும், ஊராட்சிகளில் குறைவான வரி வசூல் செய்துள்ள அலுவலா்கள் விரைந்து வரி வசூல் செய்யவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனுக்குடன் சரிபாா்த்து வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி