சஞ்சீவியின் 3 வயது குழந்தை திருச்செல்வம் நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக செய்யாற்றில் இறங்கியதில், நீரில் அடித்துச் செல்லப்பட்டது. குழந்தையைக் காப்பாற்றும் முயற்சி பலனளிக்காததையடுத்து, செங்கம் போலீசாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். குப்பனத்தம் அணையிலிருந்து செய்யாற்றில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, பிற்பகல் 2 மணியளவில் குழந்தை திருச்செல்வத்தின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.