தி.மலை: பாஜக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே. ரமேஷ் தலைமை வகித்தார். வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலர் எஸ். குணசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் தருமன், விஜயன், மாவட்ட துணைத் தலைவர்கள் பி. கிருஷ்ணமூர்த்தி, ஆர். சேகர், டி. சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி பொறுப்பாளர் என். பூங்கான் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கே. எஸ். நரேந்திரன் கலந்து கொண்டு ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் கே. எஸ். நரேந்திரன் பேசுகையில், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். ராணி அஹில்யாபாய் இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டப் பிறகு தன் அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காத்து 30 ஆண்டுகள் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியையும் தந்தார் என்றார். விழாவில், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சி. ஏழுமலை, மாநில கோயில் மற்றும் ஆன்மிக பிரிவின் துணைத் தலைவர் டி. எஸ். சங்கர், மாவட்ட பொதுச் செயலர்கள் பி. கவிதா, டி. ஜெய்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி