குறிப்பாக, கடந்த மாதம் கோடை விடுமுறை காலம் என்பதால், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலை நகரம் திணறியது. இந்நிலையில், இந்த மாத பௌர்ணமிக்கும் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்ய மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு