வரகூர் அண்ணா நகர் அருகே வந்தபோது, திடீரென டிரைவர் முருகனின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜெயா (55), கண்ணம்மாள் (38), மலர் (42) என்பவர்கள் உட்பட 26 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ், வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 26 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?