மத்திய பேருந்து நிலைய கழிப்பறையில் பொதுமக்களிடம் இருந்து ரூ. 10 வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முறையான கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரம் முழுவதும் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒரு தெருவில் கால்வாய் பணியை முடித்த பிறகே அடுத்த தெருவில் பணியைத் தொடங்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்காக பல தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.