ராஜகோபுரம் எதிரே நீதிமன்ற தடையாணையால், வணிக வளாகம் கட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ராஜகோபுர தரிசனத்தை தடுக்கும் வகையில் திராவிட மாடல் அரசு இருக்கக் கூடாது. தமிழகத்தில் கோயில் குடமுழுக்கு விழாக்கள் பக்தர்களின் உண்டியல் காணிக்கையில் இருந்துதான் நடத்தப்படுகிறது. அரசின் பணத்தில் அல்ல. சனாதன தர்மத்துக்கும் இந்து மக்களுக்கும் எதிராக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. ஊழல் பணத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று பேசினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி