தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்பி உத்தரவின்பேரில் செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ருதீன் தலைமையில் தலைமை காவலர்கள் குணா, மாதேஸ்வரன், சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம், பத்ராவதி பகுதியை சேர்ந்த பாபு மகன் வெங்கடேஷ்(42) என்பவர் உட்பட 4 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து மும்பையில் பதுங்கியிருந்த வெங்கடேஷை தனிப்படை போலீசார் கைது செய்து செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரிடம் இருந்து ₹1.50 லட்சம் ரொக்கம், கொள்ளையில் ஈடுபட பயன்படுத்திய கம்பி மற்றும் கருவிகளை பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?