மேலும் அருகே உள்ள கிணற்றில் தள்ளியுள்ளார். இதையடுத்து சக்திவேல் நள்ளிரவு போளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர், போலீசாரிடம் 'நானும், ரோஷினி என்பவரும் காதலித்து வந்தோம். அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். இதனால் நான், ரோஷினியிடம் உடனே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினேன். ஆனால் ரோஷினி மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அவரை கன்னத்தில் அறைந்தேன். இதனால் ரோஷினி, அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?