நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியை

திருவண்ணாமலை மாவட்டம், வேலைக்கால் கிராமத்தில் உள்ள குபேர நகர் பகுதியில் வசித்து வருபவர் யோகா ஆசிரியை கல்பனா. பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்தும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு யோகாசன விழிப்புணர்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (செப்.,28) திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ராஜராஜேஸ்வரி திருக்கோவில் அருகே யோகா ஆசிரியர் கல்பனா பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் 5 டன் எடை கொண்ட மினி பேருந்து தனது இரண்டு விரல்களால் (ஆள்காட்டி மற்றும் நடு விரல்களால் )கயிறு கட்டி சுமார் 250 மீட்டர் இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் கிரிவலப் பாதையில் தனது இரு விரல்களை ஆயுதமாக பயன்படுத்தி ஐந்து டன் எடை கொண்ட மினி பேருந்து இழுத்துச் சென்ற யோகா ஆசிரியை கிரிவலம் சென்ற பக்தர்களை கவர்ந்ததால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அவரை உற்சாகப்படுத்தியதுடன் அவருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி