திருவண்ணாமலை: 'நான் முதல்வன்' உயர்கல்வி முகாம்; மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை

செய்யாறில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான சிறப்பு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கல்வி மாவட்ட அலுவலர் செந்தல்குமார் தலைமை தாங்கினார். 

உதவி ஆட்சியர் அம்ருதா குமார், சார்-ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் உயர்கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். முகாமில் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல், மருத்துவ துணைப் படிப்புகள் உள்ளிட்ட அரசு, தனியார் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தின. பங்கேற்ற மாணவர்களுக்கு உடனடி சேர்க்கையும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி