இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், வாகனச் சோதனையில் பிடிபட்ட விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சின்னலூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (வயது 35) என்பவரிடம் போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் மாமண்டூா் அரசு மதுக் கடையில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்து அவரிடம் இருந்து மொத்த பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.