இந்த மார்க்கெட்டிற்கு தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காய் கனிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் லாரிகள் மூலம் வருகிறது. அதிகாலை இரண்டு மணியில் இருந்து மற்ற ஊர்களுக்கும் சில்லறை வணிகத்திற்கும் காய்கனி, கருவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாகவும், சில்லறை விற்பனையாகவும் காலை எட்டு மணி வரை பரபரப்பாக செயல்படும் பிரதான சந்தையாகும்.
இதனால் இங்கு சேரும் கழிவு குப்பைகளை அப்படியே விட்டு விடுகிறார்கள். இது போக்குவரத்துக்கும், சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக உள்ளது. பிரதான சாலை குப்பை மேடாக காட்சியளிப்பது பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.