கல்லூரி கழிவறையில் பாம்புகள் - அதிர்ச்சி வீடியோ!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டு ஷிப்ட்டுகளாக 8,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியின் கழிவறையில் பாம்புகள் குவிந்து கிடப்பதால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் கல்லூரியின் கழிவறையை முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. கழிவறை அமைந்துள்ள பகுதியில் புதர் மண்டி கிடப்பதாகவும் மாணவ, மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெண்கள் கழிவறையில் பாம்புகள் கூட்டமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

போதிய பராமரிப்பு இல்லாததால் பெண்கள் கழிப்பறை மற்றும் அதை சுற்றிய பகுதியில் பாம்புகள் கூட்டமாக சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. கழிவறைகளை உடனடியாக தூய்மைப் படுத்தவும், தூய்மை பணியாளர்களை கொண்டு பராமரிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி