இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அங்கிருந்து இருவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருபாகரன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
விபத்து குறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி-ஆய்வாளா் மோகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.