இந்தக் கடையை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா். செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் என். வி. பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ. ஜோதி பங்கேற்று நியாயவிலைக் கட்டடத்தை திறந்து வைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாலகோபால், வி.ஏ. ஞானவேல், ஒன்றியச் செயலா்கள், ஏ.ஜி. திராவிடமுருகன், சி.கே. ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்