திருவத்திபுரம் நகர எல்லைக்குள் உள்பட்ட கடை வீதி மற்றும் அனைத்து வீதிகளிலும் கால்நடைகள் நடமாட்டம் எந்த நேரமும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் பயமின்றி செல்ல முடியவில்லை. மேலும், துர்நாற்றமும் ஆடு, மாடு கழிவுகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விபத்திலாமல் செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதுகுறித்து நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் நகராட்சி மற்றும் நகர்மன்றத்திடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை கடைக்கு வணிகர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது