செய்யாறு: நீா்பாசனமுறையில் மரக்கன்றுகள் வளா்ப்பு பயிற்சி

செய்யாற்றை அடுத்த கடுகனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர்பாசன முறையில் மரக்கன்றுகள் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கடுகனூர் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள், கிராமப்புற தோட்டக்கலை அனுபவத் திட்டத்துக்காக முகாமிட்டு விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கல்லூரி முதல்வர் உமாபதி, கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா, குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் இறுதி ஆண்டு மாணவர்களான கே. ஹரிஹரன், தினேஷ், இளவரசன், கோவர்த்தன், குணால், பி. ஹரிஹரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் காலநிலை தாங்கும் வேளாண்மை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்து தொழில் நுட்பங்களை விளக்கிக் கூறினர். மேலும், நீர்வோர் மண்டல நீர்பாசன முறையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குறைந்த நீரில் மரங்களை வளர்த்தல், நீர் ஆவியாதல் தடுத்தல், நீர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி