எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் வீ. முருகானந்தம், திருவண்ணாமலை கிருபாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சரளா ஆகியோர் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சியை விளக்கிப் பேசினர். இலக்கு மக்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சினம் தொண்டு நிறுவன பணியாளர்கள் யோகேஸ்வரி, ஜெயப்பிரியா, புஷ்பராஜ், லட்சுமி, ஜானகிராமன், சம்பத், திட்ட மேலாளர் முருகேசன் மற்றும் இலக்கு மக்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு