இதையொட்டி, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட பண்டரெட்டியார்கள் அறக்கட்டளைத் தலைவர் வெங்கடாஜபதி மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவர் வழக்குரைஞர் கஜேந்திரன் உள்ளிட்ட பத்து நாள் திருவிழா உபயதாரர்கள், விழாக்குழுவினர், ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டணி இல்லாமல் திமுக ஜெயிக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா