செங்கம்: காா் மோதி ஒருவர் பலி

பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி பவானியுடன் புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். செங்கம்- திருவண்ணாமலை சாலையில் உச்சிமலைக்குப்பம் பேருந்து நிறுத்தப் பகுதி அருகே நேற்று (ஜனவரி 1) வந்த போது, கார் பஞ்சரானது. எனவே, காரை அங்கு நிறுத்தி விட்டு பஞ்சர் ஒட்டுவதற்காக கிருஷ்ணமூர்த்தி கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தாராம். 

அப்போது, அந்த வழியே தண்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவரும் தனிப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளருமான கிருஷ்ணராஜ் காரில் வந்தாராம். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள், கிருஷ்ணமூர்த்தி தம்பதி மற்றும் அங்குள்ள தேநீர்கடையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதாம். இதில் தேநீர் கடையில் நின்றிருந்த தருமபுரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி உள்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி