திருவண்ணாமலை: முன்விரோத தகராறில் விவசாயி அடித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் கோ. புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 43), முருகன் (வயது 45), இருவரும் உறவினர்கள். இவர்களிடையே கிராமத்தில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியைச் சேர்ந்த மாம்பாக்கம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு இருவரும் தனித்தனியாக சென்றுள்ளனர். 

அப்போது, முருகன் துக்க வீட்டுக்கு மாலை எடுத்துக் கொண்டு உறவினருடன் சென்றபோது, திடீரென வெங்கடேசன், முருகனை உருட்டுக் கட்டையால் பின்புறத் தலையில் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த முருகன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் வந்து முருகன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடையதாக 3 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி