திருவண்ணாமலை: திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளங்குண்ணி ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு" சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ. கிரி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் முனைவர் கோ.வி. லெனின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் த. மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி