இந்நிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டின் முன் தலைப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதன் பேரில், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் அகிலன், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ
இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், சேட்டுவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.