திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, இருசக்கர வாகனத்தை தவிர்க்க முயன்ற அரசுப்பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. சம்பவத்தை நேரில் கண்ட எம்.பி. தரணிவேந்தன், பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கினார்.