திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக 12 வது வார்டு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் 12-வது வார்டு உடுமலை நகர மன்ற உறுப்பினர் வின்சென்ட் ஜோசப் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.