திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆக்கட்டு பகுதிகளுக்கு இன்று கூடுதல் நீர்வரத்து திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் வரும் மார்ச் 20ஆம் தேதி வரை தகுந்த இடைவெளி விட்டு 10 நாட்களுக்கு பிரதான கால்வாய் வழியாக 440 கன அடி வீதமும், 380.16 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக பழைய ராஜவாய்க்கால் மற்றும் புதிய ஆக்கட்டு பாசனத்தில் 32,770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அமராவதி அணையில் மொத்த நீர்மட்டம் 90 அடியில் 57.71 அடியாகவும், நீர்வரத்து 36 கன அடியாக உள்ளது என குறிப்பிடத்தக்கது.