திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் புங்கன் ஓடை அருகே நேற்று (ஜூன் 3) ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த சுற்றுலாப் பயணி யானையைக் கடந்து செல்ல வேகமாகச் சென்றபோது, யானை அவரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக, சுற்றுலாப் பயணி காயமின்றி உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.