திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மறையூர் வனப்பகுதியில் ஆறு ஒன்று உள்ளது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்த வந்தன. அப்போது சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.