திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். தற்போது போதிய ரயில்கள் இல்லாததால், இயக்கப்படும் ரயில்களில் அமர இடமின்றி மக்கள் நெருக்கடியில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என உடுமலை ரயில் பயணி நல சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.