உடுமலை: தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வட்டாரத்தில் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் குழுவினர் பூளவாடி பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஆங்காங்கே தென்னை மரங்களில் தஞ்சாவூர் வாடல் நோய் தென்பட்டது. இதற்கிடையில் தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விவரங்களுக்கு குடிமங்கலம் வட்டாரத் தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொள்ள நேரில் அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி